அரசியல்உலகம்

போப் ஆண்டவருக்கு இறுதி அஞ்சலி.! வாடிகன் புறப்பட்டார் திரெளபதி முர்மு…

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாடிகன் புறப்பட்டுச் சென்றார்.

புதுடெல்லி ஏப்ரல் 25 2025 : 

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் 2025 ஏப்ரல் 21 ஆம் தேதி திங்கட்கிழமை மரணம் அடைந்தார். போப் பிரான்சிஸ் இன் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 88 வயதான போப் ஆண்டவரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
போப் ஆண்டவர் மரத்திலான சவப்பெட்டியில் கையில் ஜெப ஆலையுடன் படுக்க வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குடியரசு தலைவர் திரவுபதி இன்று (ஏப்ரல் 25 2025) வாடிகன் புறப்பட்டு சென்றார்.

அவருடன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு மற்றும் இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் உள்பட பல்வேறு அதிகாரிகள் வாடிகன் சென்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button