Uncategorized

அதிகரிக்கும் போதைப் பொருள் விற்பனை- டிஜிபி சங்கர் ஜிவால் அவசர ஆலோசனை !

மதுரை: போதைப்பொருள் விற்பனை ஒழிப்பு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவசர ஆலோசனை நடத்தினார்.

தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் இரண்டு நாள் பயணமாக இன்று (மார்ச் 6) காலை மதுரை வந்தார். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது தலைமையில் மதுரை, தேனி, திண்டுக்கல்,விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. காவல் துறையினர் பணியின்போது மன அழுத்தம் இன்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். போக்சோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுப்பது, சைபர் கிரைம் குற்றங்களை அதீத கவனத்துடன் கண்காணித்து அந்த குற்றங்களை தடுக்க வேண்டும்.

போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் நட்புறவை பேணி காக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்கினார். மேலும், உரிய காரணங்களோடு விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு தேவையான உணவு , குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க.. சனாதான சர்ச்சை- உதயநிதிக்கு எதிராக வழக்குகள் பதிய தடை விதித்தது உச்சநீதிமன்றம் !

காவல்துறையினரின் மனஅழுத்தத்தைப் போக்கும் வகையில் புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணாக்கர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பைக் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களை கட்டுப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் அவுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button