தமிழகம்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் – மு க ஸ்டாலின்

ஆளுநரின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது.
இந்த தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி.

நாம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதல் அளிக்காத 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதை நிரூபிக்க தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் – முதலமைச்சர் ஸ்டாலின் உரை.



