அரசியல்இந்தியா

தொடங்கியது “ஆபரேஷன் சிந்தூர்” – பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல்..!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை தொடங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மே 7 2025 :

இந்திய ராணுவம் போர் ஒத்திகை ஒன்றை இன்று (7.5.25),  புதன்கிழமை நடத்தப் போவதாக அறிவித்து இருந்த நிலையில், பாகிஸ்தான் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி உள்ளது. போர் ஒத்திகைக்கு பின்பே இந்தியா தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் நினைத்திருக்கும். ஆனால் போர் ஒத்திகை ட்ரில் என்று பாகிஸ்தானை ஏமாற்றி இந்தியா இன்றே இரவோடு இரவாக பக்காவான அட்டாக் செய்துள்ளது. அதிகாலை 2 மணி அளவில் தாக்குதல்கள் நடந்துள்ளன.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்துார்’ என்ற பெயரில் ஒரு முக்கிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ், இந்திய படைகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தியாவின் மீது தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்திய இடங்களே இந்தத் தாக்குதலுக்கு இலக்கு வைக்கப்பட்டன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிக்கை

இந்த நடவடிக்கையில், இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் PoK-யில் அமைந்துள்ள பஹவல்பூர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத மறைவிடங்கள் மீது இலக்குத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.இந்தியாவின் இந்தத் தாக்குதல் அண்டை நாட்டுடன் போரிடும் நோக்கத்துடன் நடத்தப்படவில்லை என்றும், இது ஆத்திரமூட்டும் நடவடிக்கை அல்ல என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் எந்த ராணுவத் தளங்களும் இலக்கு வைக்கப்படவில்லை எனவும், இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதில் இந்தியா மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்தது எனவும் செய்திக்குறிப்பு கூறுகிறது

2016, 2019 ஆம் ஆண்டு தாக்குதல்களை விட வீரியமான தாக்குதல் ஆபரேஷன் சிந்தூர் என்கிறார்கள்.

இந்திய மண்ணில் இருந்து கொண்டே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிப்பு.

இந்தியா கொடுத்த பதிலடியில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடந்தது குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவிற்கு இந்தியா தகவல் அளித்துள்ளது.

பாகிஸ்தானின் எல்லைக்குள் இந்திய ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் பிரதமர் உறுதி செய்துள்ளார்.

பாகிஸ்தானில் நுழைந்து அத்துமீறாமல் இந்திய எல்லையில் இருந்தபடியே ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என தகவல்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் பாகிஸ்தானில் 60 பேர் காயம் என தகவல்.

ஆபரேஷன் சிந்தூர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button