விளையாட்டு

பிசிசிஐ விருது வழங்கும் விழா: சச்சின் டெண்டுல்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்!

பிசிசிஐ தனது வருடாந்திர விருது வழங்கும் விழாவை மும்பையில் நடத்தியது. 2023-24ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா, கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா, முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மற்றும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.

24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்த சச்சின் டெண்டுல்கருக்கு கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பெற்றுக்கொண்டார்.

பெண்கள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா இரண்டு விருதுகளை வென்றார் – சிறந்த சர்வதேச வீராங்கனை மற்றும் அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த வீராங்கனை. சமீபத்தில் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் பிசிசிஐயின் சிறப்பு விருதைப் பெற்றார்.

புதிய வீரர்களில் சர்ஃபராஸ் கான் (ஆண்கள் பிரிவு) மற்றும் ஆஷா சோபனா (பெண்கள் பிரிவு) சிறந்த அறிமுக வீரர் விருதுகளை வென்றனர். தீப்தி சர்மா ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்ததற்கான விருதைப் பெற்றார். அக்ஷய் டோட்ரே சிறந்த உள்நாட்டு நடுவர் விருதையும், மும்பை வான்கடே மைதானம் சிறந்த கிரிக்கெட் மைதான விருதையும் பெற்றன.

விழாவில் பேசிய சச்சின், “இந்த கௌரவத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இளம் வீரர்களே, உங்களிடம் அபார திறமை உள்ளது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, சிறப்பாக விளையாடுங்கள். விளையாட்டு வாழ்க்கை முடிந்த பிறகுதான் இதன் மதிப்பு புரியும். நாட்டின் பெருமையை உயர்த்தும் விதமாக செயல்பட வேண்டும். வெளி விஷயங்களால் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அறிவுரை வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button