ஆன்மீகம்

ஜோதிடத்தில் பஞ்ச பூதங்கள்…ஒரு ஆய்வு

பஞ்சபூதங்களாகிய நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் என்பதனை நாம் நன்கு அறிவோம் . இதே பஞ்சபூதங்கள் தான் நம் உடலிலும் நிறைந்திருக்கின்றன . இது இயற்கையின் விதியாகும் .

சென்னை ஏப் 20 2025

இந்த உலகில் நடைபெறும் அனைத்து செயல்களும் நிலத்தை ஆதாரமாகக் கொண்டே இயங்குகின்றது . அதைப் போன்றே மனித உடலானது நமது அனைத்து செயல்களுக்கும் ஆதாரமாக இருப்பதால் இந்த உடலே நிலமாக அமைகின்றது . இந்த உடலினுள் ஓடிக்கொண்டிருக்கும் இரத்த ஓட்டம் நீராக அமைகின்றது . நீர் இன்றி இமையாது நிலம் என்பது போல இரத்த ஓட்டம் இல்லாமல் இந்த நிலமாகிய உடல் அமையாது .

நெருப்பு என்ற உஷ்ணம் இந்த பூமிக்கு சூரியன் வழியாகக் கிடைக்கின்றது . அதேபோன்று இந்த இடலின் உஷ்ணமானது இரத்த ஓட்டத்தினால் நரம்பு மண்டலங்களின் வாழியாக உற்பத்தியாகி ஒரே சீராக 98.6 டிகிரி பாரன்ஹீட்டாக அமைகின்றது . .

காற்றின் அவசியத்தை நாம் நன்கு உணர்ந்திருக்கின்றோம் . இந்தக் காற்றானது கடலில் உள்ள நீரை ஆவியாக்கி மீண்டும் மழை பொழிய வழி வகுக்கின்றது . அதேபோல் காற்றானது மனித உடலில் உள்ள இரத்தத்திலுள்ள கழிவுகளை அகற்றி கரியமில வாயுவாக வெயியேற்றி பிராண வாயுவை உடலினுள் கொண்டு செல்கின்றது .

கடைசியாக வான்வெளி எனும் ஆகாயமாகும் . இந்த ஆகாயம் இல்லாமல் பஞ்ச பூதங்களின் நிலம் , நீர் , நெருப்பு , காற்று ஆகியவை விரியவும் குறுகவும் இடமற்றுப் போகும் . இதேபோன்று மனித உடலில் ஒன்றியிருக்கும் உயிரே ஆகாயம் எனும் விண்ணாக நமது உடலில் இருக்கின்றது . அனைத்து இயக்கங்களும் நடைபெற வெட்டவெளியாகவும் உதவுகிறது .

நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் சக்தியினைக் கொண்டு உடல் உறுப்புகள் தங்கள் தேவையினை சூழ்நிலைக்கேற்ப பக்குவப்படுத்திக் கொள்கிறது . உணவுப் பொருளோடு நீரினை சேர்த்து , இரத்தம் என்னும் திரவ பொருளாக உடலினுள் மாற்றி அந்த இரத்த திரவம் , தன் தன்மையில் இருந்து மாறாமல் உடல் முழுக்க உள்ள உறுப்புகளுக்குச் செல்ல இந்த பஞ்சபூத சக்திகள் உதவிபுரிகின்றன .

இந்த இரத்த திரவத்திற்கு தேவையான காற்றாக ( பிராண வாயு அல்லது ஆக்ஸிஜன் நிறைந்தது ) திரவ நிலைக்கு தேவையான நீராக , உடல் முழுக்க ஒரே தன்மையோடு இருக்கச்செய்யத் தேவையான சூடுதன்மை ( நெருப்புதன்மை ) யாக , உறுப்புகளுக்கு சக்தி தரும் உணவுப் பொருளாக இந்த பஞ்சுபூத சக்தி மனிதனுக்கு உதவிபுரிகின்றது . இந்த இரத்த ஓட்டம் மற்ற எல்லா உயிர் சக்திகளுக்கும் கட்டுப்படுகிறது .

மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ; நெருப்பு
ரிஷபம் , ​​கன்னி மற்றும் மகரம் :- நிலம்
மிதுனம் , துலாம் மற்றும் கும்பம் ;- காற்று
கடகம், விச்சிகம் , மற்றும் மீனம் :- நீர்

1,5,9. ;- நெருப்பு
2,6,10. ;- நிலம்
3,7,11. ;- காற்று
4, 8, 12. :- நீர்

பஞ்ச பூத கிரகங்கள்
சூரியன் செவ்வாய் ;- நெருப்பு
சந்திரன் சுக்கிரன் நீர்
புதன் நீலம்
சனி வாயு
வியாழன் ஆகாயம்

தீ (நெருப்பு)
அடையாளம் தீ உடலின் செயல்பாட்டிற்கான ஆற்றலைக் குறிக்கிறது, அதில் எந்தப் பொருளும் இல்லை, ஆனால் அதன் முதன்மை செயல்பாடு என்பது பொருளின் நிலையை மாற்றுவதாகும். உடலில், உணவை கொழுப்பு அல்லது வளர்சிதை மாற்றமாக மாற்றும் ஆற்றல் நெருப்பில் உள்ளது. நெருப்பு நமது நரம்பு அமைப்பு, சிந்தனை செயல்முறை மற்றும் ஆசைகளை கட்டுப்படுத்துகிறது. தன்னம்பிக்கை, உற்சாகம், செயலில் திறன் , வீரியம், ஆற்றல், வேகம், உயிர் மற்றும் வீக்கம், பித்தம் தொடர்பன தொல்லைகள், காய்ச்சல், வெட்டு காயம் மற்றும் இரத்த கொதிப்பு போன்ற நோய்கள் போன்ற நீண்ட காலம் நீடிக்காத நோய்களை இது குறிக்கிறது. .

பூமி (நிலம்)
அடையாளம் பூமி இயற்கையில் நிலையானது, பொருளின் திட நிலையை வெளிப்படுத்துகிறது. பூமியின் அறிகுறிகள் ஒட்டுமொத்த ஒலி ஆரோக்கியம், ஸ்திரத்தன்மை, உறுதிப்பாடு, உறுதியானது, நாள்பட்ட கோளாறுகள், பதட்டம், நிலையற்ற மனம், அமைதியின்மை மற்றும் உடல் நிறை, எலும்புகள், சதை, செல்கள், திசுக்கள் மற்றும் பற்கள் போன்ற உடல் பாகங்களை கட்டுப்படுத்துகின்றன. நோய் காற்றோட்டமான அறிகுறியை விட நீண்ட காலம் நீடிக்கிறது ஆரோக்கியத்தை மீட்டெடுக்க அதிக நேரம் செலவழிக்கிறது.

காற்று (வாயு)
நிலையற்றது அல்லது நகரும், வேகம், மற்றும் இயல்பு. உறுப்பு மூச்சு வாய்வு போன்ற ஆற்றலின் முதன்மை மூலமாகும், மேலும் எரியத் தேவையான தீப்பிடிக்கவும் காரணமாகிறது. வாழ்க்கைக்கு அவசியமான ஆற்றல் பரிமாற்றத்தின் ஊடகம். நரம்பு மண்டலம், புத்தி, மன உடற்பயிற்சி, மனம், எண்ணங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது, அவை அதிகப்படியான ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் முதன்மையாக பொறுப்பேற்கின்றன, அதிக வேலை செய்வதன் மூலம் நரம்பு முறிவு ஏற்படுகிறது.

நீர் (அப்பு)
உறுப்பு தண்ணீரைப் போல நகரக்கூடியது மற்றும் ஒரு திரவ வடிவத்தைக் கொண்டுள்ளது, உடல் அமைப்பில் சுமார் 70% ஆகும். உடலின் வெப்பநிலை, ஆற்றல் நிலை, ஆதரவு நோய் எதிர்ப்பு சக்தி, பலவீனமான உடலமைப்பு, குறைந்த ஆற்றல் சேமிப்பு, இரத்த சோகை, சகிப்புத்தன்மை, கட்டிகள், உணர்திறன் மனம், புற்றுநோய், சிறுநீர், செரிமானம், கண்புரை மற்றும் பராமரிக்க உடலில் திரவ அளவை பராமரிக்க வேண்டியது அவசியம். உடலின் கழிவுப்பொருட்களை வெளியே எடுக்கவும். பூர்வீக குணமடைய அல்லது நோயிலிருந்து நிவாரணம் பெற அதிக நேரம் எடுக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button