தமிழகம்வேலைவாய்ப்பு
சென்னையின் 'பிங்க் ஆட்டோக்கள்' திட்டம்- பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ‘பிங்க் ஆட்டோக்கள்’ வழங்கும் திட்டத்திற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் ‘இளஞ் சிவப்பு ஆட்டோக்கள்’ (பிங்க் ஆட்டோக்கள்) வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக 100 பயனாளிகளுக்கு, கடந்த 8-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆட்டோக்களை வழங்கினார்.

2-ம் கட்டமாக தற்போது விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்ற, சென்னையை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சென்னை மாவட்ட சமூகநல அலுவலர், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை -600001 என்ற முகவரிக்கு வரும் ஏப்.6-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.




