
நியூயார்க் ஏப் 21 2025

நியூயார்க்கில் இருந்து வரும் அறிக்கைகள் சர்வதேச பொருளாதாரத்தின் நிலைமை குறித்து கவலைகளை எழுப்புகின்றன. உலக பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் உள்ளது, இதனால் பல நாடுகள் தங்கத்தை அதிகம் வாங்கி குவிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் தங்கம் வாங்குதல்:
இந்தியா உட்பட பல நாடுகள் தங்கத்தை கையிருப்பாக சேமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான காரணங்கள்:

1. பொருளாதார நிலையற்ற தன்மை, பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பு குறைதல் போன்றவற்றால் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.
2. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவின் பொருளாதார மந்தம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கு பதட்டம் போன்றவை உலகப் பொருளாதாரத்தை பாதித்துள்ளன.
3. உலகின் பல மத்திய வங்கிகள் (RBI உட்பட) தங்கத்தை அதிகரித்து வாங்கி வருகின்றன, இது நாணயப் பாதுகாப்புக்கு உதவுகிறது.
IMF மற்றும் உலக வங்கியின் கணிப்புகள்படி, 2024-25ல் உலக வளர்ச்சி விகிதம் குறையலாம்.
தேவை அதிகரிப்பால் தங்க விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BRICS நாடுகள் டாலரைத் தவிர்த்து மாற்று நாணய முறைகளைத் தேடுவதால், தங்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கலாம்.

தங்கம் ஒரு நிலையான முதலீடாக கருதப்படுவதால், பொருளாதார நிச்சயமற்ற தருணங்களில் இந்தியா உள்பட பல நாடுகள் அதைக் குவிக்கின்றன. இந்தியாவின் தங்க வாங்குதல் உலகப் பொருளாதார சூழலின் பிரதிபலிப்பாகும்.
பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் பணத்தின் மதிப்புகள் மோசமாக சரியும். ஆனால் தங்கத்தின் மதிப்பு உயரும். பொருளாதார சரிவுகளின் போது தங்கத்தின் மதிப்பே ஒரு நாட்டை காக்கும். இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.
இந்தியாவின் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி குவிப்பதில் தீவிரமாக உள்ளது. தங்கத்தின் கையிருப்பு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, அதன் தங்கத்தின் மதிப்பு ஒரே வாரத்தில் ரூ.11,986 கோடி உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் மூலம், ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க கையிருப்பு மதிப்பு ரூ.6,88,496 கோடியாக உயர்ந்துள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பின் பொருளாதார சரிவு நிலவும் இந்த காலகட்டத்தில் ரிசர்வ் வங்கியின் தங்கம் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. உலக அளவில் பல மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்கும் நிலையில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.

அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக பற்றாக்குறையை போக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவிலிருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் உள்ளிட்ட உயர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்வதை இந்தியா பரிசீலித்து வருகிறது.




