அரசியல்உலகம்

இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏதோ தவறு உள்ளது; அமெரிக்காவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

அமெரிக்காவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டை முன்வைத்து பேசியது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க், ஏப்.21 2025

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது என்றும், இந்த அமைப்பில் ஏதோ தவறு உள்ளது என்றும் அமெரிக்காவில் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஸ்டனில் இந்திய புலம்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றிய காந்தி, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலை உதாரணமாகக் காட்டி, இரண்டு மணி நேரத்தில் வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகக் கூறினார்,

மேலும், இது சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார். இது குறித்த ராகுல் காந்தி மேலும், “மகாராஷ்டிராவில் மொத்த மக்கள் தொகையை விட அதிகமான மக்கள் வாக்களித்தனர்.

இது ஒரு உண்மை. தேர்தல் ஆணையம் மாலை 5:30 மணியளவில் ஒரு புள்ளிவிவரத்தை எங்களுக்கு வழங்கியது. மேலும் இரவு 7:30 மணியளவில் இரண்டு மணி நேரத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.  இது சாத்தியமற்றது” என்றார் என ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்கள் மீதான குற்றச்சாட்டுகளில் உரிய உண்மை இல்லை எனக் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button