ஆன்மீகம்தமிழகம்

மதுரை ஆதீனம் கார் விபத்தில் சிக்கியது – உளுந்தூர்பேட்டையில் சம்பவம்

மதுரை ஆதீனம் பயணித்த கார் விபத்தில் சிக்கியது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விழுப்புரம் மே 3 2025

சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதில், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, பல்வேறு மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், நீதிபதிகள், சிவாச்சாரியர்கள், சைவ சமய அறிஞர்கள், அசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சைவ மாநாட்டில் பங்கேற்க மதுரையில் இருந்து மதுரை ஆதீனம் இன்று காரில் சென்னை புறப்பட்டார்.

உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது மதுரை ஆதீனம் பயணித்த கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, விபத்துக்குள்ளான காரிலேயே மதுரை ஆதினம் சென்னை புறப்பட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button