தமிழகம்

அமைச்சர் பொன்முடி கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்

திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து  அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பொன்முடி வகித்து வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அருவருக்கத்தக்க பேசிய வீடியோ வைரல் ஆன நிலையில் நடவடிக்கை.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, பெண்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார். அவர் ஆபாசமாக பேசியது தொடர்பாக வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது.

பொன்முடி நீக்கத்தை தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம்  செய்யப்பட்டுள்ளதாக  திமுக அறிவித்துள்ளது.

இதனிடையே, விலைமாது என்ற வார்த்தையை குறிப்பிட்டு பொதுவெளியில் அமைச்சர் பொன்முடி பேசியது பெண்கள் மத்தியில் சர்ச்சை ஆன நிலையில் அவர் எந்த காரணத்திற்காக அப்படி பேசி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button