உலகம்

மாஸ்கோவில் மே 9 ஆம் தேதி நடைபெறும் வெற்றி நாள் அணிவகுப்புக்கு பிரதமர் மோடிக்கு ரஷ்யா அழைப்பு

மே 9ம் தேதி மாஸ்கோவில் நடைபெறவிருக்கும் வெற்றி தின விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோதிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பிதழை ரஷ்யா அனுப்பியுள்ளது.  இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வெற்றி கொண்டதன்  80 ஆண்டுகள் நிறைவடைகின்றன.  இதை ரஷ்யாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரே ருடெங்கோ  உறுதிப்படுத்தியுள்ளார். 

ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ்ஸை மேற்கோள் காட்டிய ருடெங்கோ கூறியதாவது, “இந்த விழா விவாதிக்கப்பட்டு வருகிறது, இது இந்த ஆண்டே நடைபெறும். பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் உள்ளது.” இந்த விஜயம் தற்போது இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தையில் உள்ளது. பிரதமர் மோடி இந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொள்வார் என மாஸ்கோ நம்புகிறது என தெரிவித்துள்ளார்.

ரஷ்யா இந்த ஆண்டின் நினைவு அணிவகுப்பில் பங்கேற்க பல “நட்பு நாடுகளின்” தலைவர்களையும் அழைத்துள்ளது. இந்த ஆண்டு நிகழ்வு, ரஷ்யாவின் இராணுவ மற்றும் வரலாற்று மரபை வெளிப்படுத்தும் முக்கியமான வருடாந்திர நிகழ்வாகும். 1945 ஜனவரியில் தொடங்கிய சோவியத் தலைமையிலான படையெடுப்புக்குப் பிறகு, மே 9, 1945 அன்று ஜெர்மனி சரணடைந்ததை இந்த விழா நினைவுகூருகிறது.

பிரதமர் மோடி கடந்த முறை ரஷ்யாவுக்கு ஜூலை 2024-ல் சென்றார்.  அந்தப் பயணத்தின் போது, அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் விரிவான உரையாடல்களை நடத்தி, இந்தியா வருகை தர அவரை அழைத்தார். புடின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாலும், அவரது வருகைக்கான தேதிகள் இன்னும் வெளியாகவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button