அரசியல்தமிழகம்

கலைஞர் நினைவிடத்தில் ஆண்டாள் கோவில் கோபுரம்

இன்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை என்பதால் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் போன்று அவரது சமாதியில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் இறை மறுப்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்துக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே இதுபோன்று அவரது சமாதியின்  மீது கோபுரம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தற்போது விமர்சனம் எழுந்துள்ளது

இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழில்: அண்ணாமலை கண்டனம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள்.

கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button