
மும்பை ஏப் 22 2025

நடிகர் சைஃப் அலி கான், சமீபத்தில் கத்தாரின் தோஹாவில் உள்ள தி பேர்ல், தி செயிண்ட் ரெஜிஸ் மார்சா அரேபியா தீவில் ஒரு ஆடம்பரமான சொத்தை வாங்கியதாக தெரிவித்துள்ளார். அல்ஃபர்டன் குழுமம் நடத்திய ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சைஃப் அலிகான் இதனை தெரிவித்துள்ளார். அப்போது, கத்தாரின் பாதுகாப்பு, அழகு மற்றும் இந்தியாவிற்கு அருகாமையில் இருக்கிறது என்றார்.
மேலும் அது தனது குடும்பத்திற்கு சரியான இடமாகும் என்றும் கூறினார். தொடர்ந்து, தனது வீடு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றும் வீட்டிலிருந்து விலகி ஒரு வீடு வேண்டும் என்று உணர்ந்ததாகவும் சைஃயிப் அலிகான் தெரிவித்தார். தொடர்ந்து, “ஒரு விடுமுறை இல்லம் அல்லது இரண்டாவது வீட்டைப் பற்றி யோசித்துப் பாருங்கள். எனக்கு சில விஷயங்கள் நினைவிருக்கிறது.

ஒன்று, அது வெகு தொலைவில் இல்லை, எளிதில் அணுகக்கூடியது. பின்னர் மற்றொன்று, மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அது மிகவும் பாதுகாப்பானது, அங்கு இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. மேலும் ஒரு தீவுக்குள் ஒரு தீவு என்ற கருத்தும் மிகவும் ஆடம்பரமாகவும் அழகாகவும் இருக்கிறது, மேலும் அது வாழ்வதற்கு மிகவும் அழகான இடமாக உள்ளது. அங்கு இருக்கும்போது பெறும் உணர்வுதான் முக்கியமான விஷயம், காட்சிகள், உணவு, வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கையின் வேகம், இவை எனது முடிவுக்கு வழிவகுத்த சில விஷயங்கள்” என்றார்.
படோடி குடும்பம்

இது தவிர, சைஃப்பிற்கு வேறு பல சொத்துக்கள் உள்ளன. தற்போது சைஃயீப் அவரது மனைவி-நடிகை கரீனா கபூர், மகன்கள் தைமூர் மற்றும் ஜெஹ் ஆகியோர் பாந்த்ரா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர்.
இது தவிர சைஃயீப் அலிகானுக்கு மூதாதையர் பட்டோடி அரண்மனையும் உள்ளது. மேலும், சைஃயீப்புக்கு லண்டன் மற்றும் ஜிஸ்டாடிலும் சொத்துக்கள் உள்ளன.
சைஃயீப் மீது தாக்குதல்
சைஃப் அலிகான் கத்தியால் தாக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த சொத்தை வாங்கியுள்ளார். ஜனவரி 16 ஆம் தேதி, கொள்ளையடிக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றம் சாட்டப்பட்ட ஷெஹ்சாத், என்பவர் சைஃயீப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்து அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.




