கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன…? பரிகாரங்கள்…!

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? – 12 வகை கால சர்ப்ப தோஷங்களும் அவற்றுக்கான பரிகாரங்களையும் இப்போது பார்ப்போம்.
சென்னை ஏப் 22 2025

ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு கேது கிரகங்களுக்கிடையே மற்ற கிரகங்கள் இருப்பின் கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. அப்படி ராகு கேது எந்த இடத்தில் அமைகிறது என்பதைப் பொறுத்து அதன் வகைகள் அறியப்படுகிறது. கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்….
ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு கேது கிரகங்களுக்கிடையே மற்ற கிரகங்கள் இருப்பின் கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. அப்படி ராகு கேது எந்த இடத்தில் அமைகிறது என்பதைப் பொறுத்து அதன் வகைகள் அறியப்படுகிறது. கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்….
கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

கால சர்ப்ப தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என ஜோதிடத்தில் பொதுவாக அழைக்கப்படுகிறது.
பாம்பை ஒருவர் அல்லது சிலர் அடித்துக் கொல்லும் போது அது உயிர் விடும் தறுவாயில் கொல்பவரைப் பார்த்து விடும் தோஷம் தான் சர்ப்ப தோஷம் எனப்படுகிறது.
பிற தோஷங்களைப் போல முற்பிறவியில் செய்ததால் மட்டும் ஏற்படுவதில்லை. அந்த பிறப்பிலேயே கூட ஏற்படலாம்.
இப்படி கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்குத் திருமணம் நடப்பதில் தாமதம் ஏற்படும். அப்படி நடந்தாலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு உடல் நல குறைவுடன் பிறக்கும். தற்போது நலமுடன் இருந்தாலும், அடிக்கடி நோய் தாக்குதலுக்கு உள்ளாகுதல் நிகழலாம்.
கால சர்ப்ப தோஷம் ஏன் ஏற்படுகிறது?

இனப்பெருக்கம் செய்ய இரு பாம்புகள் கூடி பின்னிப் பிணைந்து காதல்வய்ப்பட்டிருக்கும் போது அவற்றில் ஒன்றை அல்லது இரண்டையும் கொடூரமாகக் கொல்வதால் ஏற்படுகிறது.
மனிதர்கள் அந்த பாம்பை அடித்து கொல்ல முயலும் போது, நாங்கள் உங்களுக்கு எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம் என்பதைப் போல் அதன் வாலால் தரையில் அடித்து உறுதி செய்யும். அப்படி செய்த பின்னரும் மனிதர்கள் அதை கொன்றால். அது கொல்பவர்களை பழித்து விட்டு சாகும்.
ராகுவைப் போல் கெடுப்பவனும் இல்லை, கேதுவைப் போல் கொடுப்பவரும் இல்லை என்கிறார்கள் எப்படி தெரியுமா?
இது பாம்பை கொல்வதால் மட்டுமல்லாமல். மற்ற விலங்குகளுக்கும் பொருந்தும். மற்ற விலங்குகளும் கூடி இருக்கும் போது அதை கல்லால் அல்லது கம்பால் அடிப்பதாலும் ஏற்படும்.
இந்த சாபம் பெற்றவர்கள் அடுத்த பிறவியில் மனிதராக பிறந்து அவர்களின் ஜாதகத்தில் லக்கினத்தில் ராகு அல்லது கேது தனித்திருக்க பிறக்கின்றனர்.
இந்த பாம்பு கிரகங்களான ராகு – கேது இடையே ஏனைய கிரகங்கள் சிக்கிக் கொள்ளும். இப்படி ராகு கேது இடையே மற்ற கிரகங்கள் அடைப்பட்டு கிடப்பதற்கு கால சர்ப்ப தோஷம் எனப்படுகிறது.
கால சர்ப்ப தோஷத்தின் விளைவுகள்

கால சர்ப்ப தோஷத்தினால் பாதிக்கப்பட்டவரின் ஜாதகத்தில் ராகு கேதுவுக்கு இடையே ஏனைய கிரகங்கள் அமைந்து, அவைகள் கொடுக்கும் நன்மைகளில் நஞ்சு ஏற்பட்டு தீமையாகும்.
இவர்களுக்குத் திருமண தடை ஏற்பட்டு வயது 35 வரை வாழ்க்கையை வீணடிப்பார்கள்.
5ல் ராகு உள்ள ஜாதகம்
5ம் இடத்தில் ராகு இருப்பின் அவர்களுக்கு பெண் குழந்தையே பிறக்காது. ஆண் குழந்தை தான் பிறக்கும். அதுவும் நோய் தாக்குதலால் அல்லல் படும்.
5ல் கேது உள்ள ஜாதகம்
5ல் கேது இருப்பின் அவர்களுக்கு ஆண், பெண் குழந்தைகள் பிறக்கும். இருப்பினும் அவர்கள் நோஞ்சானாக இருப்பார்கள். அதுவும் பெற்றோரை வெறுக்கும் மன நிலையில் இருப்பார்கள்.
கால சர்ப்ப தோஷம் 12 வகைகள்

சர்ப்ப கிரகங்களான ராகு கேது அமைந்திருக்கும் வீடுகளைப் பொருத்து வகைப்படுத்தப்படுகிறது.
1. அனந்த கால சர்ப்ப தோஷம் :
ராகு முதல் வீட்டிலும் (லக்கினத்தில்), கேது 7ம் இடத்திலும் இருப்பதால் அனந்த கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இதற்கு விபரீத கால சர்ப்ப தோஷம் என்பார்கள்.
இந்த ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு வாழ்வில் பல இடையூறுகள், துன்பங்கள் ஏற்படும். இவர்கள் பல பிரச்னைகளுக்கு மத்தியில் தன் சொந்த முயற்சியால் வாழ்வில் முன்னுக்கு வருவார்கள். இவர்களுக்கு திருமண தாமதம் ஏற்படும்.
2. சங்க சூட கால சர்ப்ப தோஷம்:
ராகு 9ம் இடத்திலும், 3ல் கேதுவும் இருக்கும் இந்த ஜாதகத்தினர் பொய்களை அதிகம் பேசுவார்கள். முன்கோபம் அதிகம் கொண்டவராகவும், அதிக துன்பங்களை அனுபவிக்கக் கூடிய சூழலும், ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்க வேண்டி வரும்.
3. கடக சர்ப்ப தோஷம்
ராகு 10ம் வீட்டிலும், கேது 4ல் அமையப்பெற்ற இவர்களுக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படும். அதோடு அரசால் தண்டனைப் பெறுவார்கள்.
10ல் ராகு இருக்கப்பெற்றவர்கள் இருட்டு தொடர்பான தொழில் அமையும். அதாவது புகைப்படம், எக்ஸ்ரே போன்ற வேலையை செய்வார்கள். சட்டத்திற்கு எதிரான வேலையை செய்வார்கள். இவர்கள் அரசுக்கு எதிராகவும், வாழ்வில் மன அமைதி இன்று வாழநேரிடும்.
குளிகை சர்ப்ப தோஷம், வாசுகி சர்ப்ப தோஷம்
4. குளிகை சர்ப்ப தோஷம்
ராகு 2ம் இடத்திலும் கேது 8லும் இருப்பவர்கள் உடல் நல பிரச்சினைகளால் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படுவார்கள். அதோடு விபத்து, இழப்புகள் ஏற்படும் அமைப்பும், மன அமைதி அற்ற நிலை இருக்கும்.
பொருளாதார பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.
ராகுவுக்கு இடம் கொடுத்த ராசி இறைவன் பலம் பெற்றிருந்தால் வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும்.
5. வாசுகி சர்ப்ப தோஷம்
ராகு 3லும், கேது 9ம் இடத்திலும் அமையப்பெற்றிருப்பின் வாசுகி சர்ப்ப தோஷம் ஏற்படும். இதனால் தொழில், உத்தியோகத்தில் பிரச்னைகள் ஏற்படும். இளம் வயதில் துன்பங்களும், தொல்லைகளும் சந்திக்க வேண்டி இருக்கும்.
6. சங்கல்ப சர்ப்ப தோஷம்
ராகு 4ம் இடத்திலும், கேது 10ம் இடத்தில் அமையப்பெற்றிருந்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அமைவதில் சிக்கல் ஏற்படும். வேலை கிடைத்தாலும் அதில் சாதிக்க முடியாமல், நிலை தன்மை இல்லாமல் இருக்கும். தொழில் தொடங்கினாலும் அதில் பெரிய லாபமோ, முன்னேற்றமோ இருக்காது.
7. பத்ம சர்ப்ப தோஷம்
ராகு 5ம் இடத்திலும், கேது 11ம் இடத்தில் அமைந்திருந்தால் குழந்தை செல்வம் உண்டாகாது. அல்லது கால தாமதம் ஏற்படும்.
கால் சர்ப்ப தோஷம் இருக்கக்கூடிய காலம்
சோதனைக் குழாய் குழந்தை முயற்சியை மேற்கொண்டாலும் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்.
பேய், பிசாசுகளின் தொல்லை ஏற்படும். நண்பர்களால் ஏமாற்றமும், வாழ்நாள் முழுவதும் நோய் பாதிப்பு ஏற்படக் கூடும்.
8. மகா பத்ம சர்ப்ப தோஷம்
ராகு 6லும் கேது 12ல் இருக்கப் பெற்றால் மகா பத்ம சர்ப்ப தோஷம் ஏற்படலாம். இதனால் வாழ்நாள் முழுவதும் அமைதியற்ற நிலை இருக்கும். பல இடையூறுகள் ஏற்படக் கூடிய சூழல் இருக்கும். 6ம் இடத்தில் ஏதேனும் ஒரு கோள் இருப்பின் அதைப் பொறுத்து அவருக்கு உடல் நலம் மேம்படுவதும், எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடும் அமைப்பு இருக்கும்.
9. தக்ஷக சர்ப்ப தோஷம்
போகர் அருளிய நாக தோஷத்திற்கான மிக எளிய பரிகாரம் இதோ!

கேது லக்கினத்திலும், ராகு 7ம் இடத்தில் அமையப்பெற்றவர்கள் அவசர கதியில் செயல்களை செய்வார்கள். முன் யோசனை செய்யமாட்டார்கள். வரும் செல்வம் முழுவதும் மது, மாதுக்காக அதிகம் செலவு செய்பவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு திருமணமானாலும் பல பிரச்னைகள் இருக்கும் அதனால் மன அமைதியில்லாமல் தவிப்பார்கள்.
10. கார் கோடக சர்ப்ப தோஷம்
ராகு 8ம் இடத்திலும், கேது 2ம் இடத்திலும் அமைந்தால் கார் கோடக சர்ப்ப தோஷம் ஏற்படக்கூடும். அவர்களுக்கு தந்தை வழி சொத்துக்கள் இருந்தாலும் கிடைக்க வாய்ப்பில்லை. உறவினர்கள். நண்பர்கள் பகையாக மாற வாய்ப்புள்ளது.
11. விஷ் தார சர்ப்ப தோஷம்
ராகு 11ம் இடத்தில் அமைந்து கேது 5ல் அமைந்தால் விஷ் தார சர்ப்ப தோஷம் ஏற்படும். இதனால் திருமணம் நடந்தாலும் அவர்கள் குடும்பத்துடன் வாழாலும், அடிக்கடி வெளியூர், வெளிநாடு பயணம் செய்வார்கள். குழந்தைகள் பிறந்தாலும் அவர்களால் துன்பமும், அவப்பெயரும் ஏற்படும்.
வாழ்வின் பிற்பகுதியான 50 வயதைக் கடந்த பின் நல்ல வாழ்வு கிடைக்கும்.
12. சேஷ நாக சர்ப்ப தோஷம்
ராகு 12ல் அமர்ந்து, கேது 6ம் இடத்தில் இருப்பின் சேஷ நாக சர்ப்ப தோஷம் உண்டாகும். இவர்கள் கொடிய நோய்க்கு ஆளாவார்கள். எதிரிகளால் தொல்லையும், வம்பு வழக்கை சந்திக்க வேண்டி வரும்.
அனந்த் – 27 வயது
குளிகா – 33 வயது
வாசுகி – 36 வயது
சங்கலப – 42 வயது
பத்மா – 48 வயது
மகா பத்மா – 54 வயது
கலா சர்ப தோஷ பரிகாரம்
கலா சர்ப தோஷம் பல கஷ்டங்களை ஏற்படுத்தக்கூடும், அதன் விளைவுகளைத் தணிக்க வழிகள், பரிகாரம் உள்ளன
சிவலிங்கம் – கலா சர்ப தோஷத்திலிருந்து நிவாரணம் பெற சிவ லிங்க வழிபாடு அவசியம்.
ஒரு கோவில் அல்லது ஒரு மத நிறுவனத்திற்குப் பால் தானம் செய்யுங்கள்.
இதற்கிடையில், ஒவ்வொரு நாளும் சுமார் அரை மணி நேரம் இறைவனை தியானியுங்கள்.
ராகுவின் ஆளும் தெய்வங்களான சிவன் மற்றும் பார்வதியை வணங்குங்கள்.
வீட்டில் கல் அல்லது உலோகத்தால் ஆன ஒரு சிறிய சிவ லிங்க சிலையை வாங்கி வைத்து, ஒவ்வொரு நாளும் ஒரு சிவலிங்கத்தின் முன் “ஓம் நமசிவாய” என்று 108 முறை ஜெபியுங்கள்.
12 ஜோதிர்லிங்க க்ஷேத்திரங்களில் ஏதேனும் ஒன்றிற்குச் சென்று இறைவனை மனதார வழிபட்டு வாருங்கள்.
ஒவ்வொரு நாளும் 108 காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும்
காயத்திரி மந்திரம்:
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|

வீட்டில் ஒரு சிறிய நாக ராஜ வெள்ளி சிலை வைத்து ஒவ்வொரு நாளும் சிறிய பூஜை செய்யுங்கள்.
திரயோதசி நாளும் பிரதோஷமும் சேர்ந்து வரும் நாளில் ஏதேனும் ஒரு சிவன் கோவிலிலும் பூஜைக்கு பால் மற்றும் தேனை வழங்குங்கள்.
நீங்கள் ஏதேனும் ஒரு பாம்பை கொல்லும் சூழல் ஏற்பட்டிருந்தால் சென்று வழிபட வேண்டிய ஆலயங்கள்
கர்நாடகாவில் உள்ள குக்கே ஸ்ரீ சுப்ரமண்ய கோயில்
ஆந்திராவில் உள்ள கால ஹஸ்தி கோயில்
தமிழகத்தில் உள்ள திருநாகேஸ்வர போன்ற கோயிலுக்கு சென்று சர்ப சம்காரம் நிவர்த்தி பூஜை செய்யவும்.



