
ஆபரேஷன் செந்தூர் பற்றி தினமும் விளக்கி வரும் இந்திய ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி 2017 ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. இந்த பேட்டி அவரது வீரப்பரம்பரையின் பின்னணியை வெளிப்படுத்துகிறது.
புது டெல்லி மே 10 2025 :

ஆபரேஷன் சிந்தூரை அடுத்து, இந்திய ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷியின் பெயர் ஒவ்வொரு இந்தியரின் வீட்டில் உச்சரிக்கும் பெயராக மாறிவிட்டது. ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் பதிலடித் தாக்குதல்களைத் தொடர்ந்து தினமும் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவரது அமைதியான கமாண்டிங் மற்றும் தெளிவுக்காகப் பாராட்டப்பட்டார். விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருடன் சேர்ந்து, கர்னல் குரேஷி இந்திய ராணுவத்தின் செயல்திறனை எடுத்து கூறுகிறார். இந்திய ராணுவத்தின் பராக்கிரமங் களை கோடிட்டுக் காட்டியது மட்டுமல்லாமல், வலிமை, ஒற்றுமை மற்றும் தேசிய பெருமையையும் அவர் அடையாளப்படுத்தி வருகிறார்.

ஆனால் இந்த மேடையில் உலகம் அவரைப் பார்ப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, கர்னல் குரேஷியின் குடும்பம் இராணுவ சேவையின் மரபில் ஆழமாக வேரூன்றியதாக இருந்தது. ஆம் அதுபற்றி இப்போது பார்ப்போம்.
கர்னல் குரேஷியின் வியக்க வைக்கும் இராணுவ பின்னணி :

2017 ஆம் ஆண்டு கர்னல் குரேஷி அளித்த ஒரு பேட்டி அவரது ஆச்சரியப்படத்தக்க வீர பாரம்பரியத்தை வெளிபடுத்துகிறது. மீண்டும் அந்த நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் கர்னல் குரேஷி தனது சக்திவாய்ந்த மூதாதையர் தொடர்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அவரது கொள்ளுப் பாட்டி, 1857 கிளர்ச்சியின் போது ராணி லட்சுமிபாயுடன் இணைந்து போராடியதாக அவர் கூறினார். “நான் ஒரு ஃபௌஜி குழந்தை, அதனால் நான் இராணுவ சூழலுக்கு மத்தியில் தான் வளர்க்கப்பட்டேன். அது மட்டுமல்லாமல், என் கொள்ளுப் பாட்டி ராணி லட்சுமி பாயுடன் இருந்தார், அவர் ஒரு பெண் போர்வீரர்,” என்று குரேஷி கூறினார். “எனது தாத்தா, இந்திய இராணுவத்தில இருந்தார், அவர், ‘ஒவ்வொரு குடிமகனும் விழிப்புடன் இருந்து நமது நாட்டிற்காகவும், தேசத்திற்காகவும் நிற்பது கடமை’ என அடிக்கடி கூறுவார்.” என்று கர்னல் குரேஷி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பல தலைமுறை சேவைப் பாரம்பரியம் தான் அவரது மதிப்புகளை தெளிவாக வடிவமைத்துள்ளது. ஒரு இராணுவக் குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அவர், தாம் ராணுவ படைகளில் சேர ஊக்குவித்தவர் தனது தாயார் என்று கூறுகிறார்.
மேலும், அவர்களின் குடும்ப வரலாறு இந்திய இராணுவ சேவையின் காலவரிசையுடன் சேர்ந்ததாகும். “என் அப்பா 1971 வங்காளதேசப் போரில் போராடினார். அவரது தந்தையும் ராணுவத்தில் இருந்தார். தனது கொள்ளு பாட்டி 1857 ஆம் ஆண்டு ஜான்சியின் ராணி சோஃபி ராஷியா பஹியின் ஜான்சி கிளர்ச்சி படையில் சேர்ந்து சண்டையிட்டதை தனது தந்தை அடிக்கடி எங்களுக்கு கூறுவார் என்று கூறியுள்ளார். அதுவே ராணுவத்தில் சேர தமக்கு உத்வேகமாக இருந்தது என்றும் கர்னல் சோபியா குரேஷி கூறியுள்ளார்.

கர்னல் சோபியா குரேஷி 1974 ஆம் ஆண்டு குஜராத்தின் வதோதராவில் ஒரு இராணுவக் குடும்பத்தில் பிறந்தார். அவர் 1997 ஆம் ஆண்டு மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். தற்போது இந்திய ராணுவத்தின் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படையில் பணியாற்றி வரும் இவர், 2016 ஆம் ஆண்டு ஆசியான் பிளஸ் பன்னாட்டு இராணுவப் பயிற்சி ‘ஃபோர்ஸ் 18’ இல் இந்தியப் படைப்பிரிவை வழிநடத்திய முதல் இந்திய பெண் அதிகாரி ஆவார். தனது கணவருடன் இணைந்து பங்கேற்ற 18 நாடுகளில் ஒரே பெண் தளபதியாகவும் இருந்தார்.
ஆபரேஷன் சிந்தூர் விளக்கக் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கியதை இந்தியா பார்த்தபோது, அந்த நேரத்தில் அவரது பங்களிப்பு வெறும் தொழில்முறை மட்டுமல்ல, அது ஒரு ஆழமான தனித்துவம் வாய்ந்தது , தலைமுறை தலைமுறையாக தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் அமைதியான உறுதியால் பின்னப்பட்டது என்பதை வெளிப்படுத்தியது.




