சினிமா

விஜய் சேதுபதி – பூரி ஜெகந்நாத்: எதிர்பார்ப்புகளை உருவாக்கிய புதிய கூட்டணி

விஜய் சேதுபதி மற்றும் பூரி ஜெகந்நாத் இணையும் தகவல் தமிழ், தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ட்ரெயின்’ மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படங்களில் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, அடுத்து பூரி ஜெகந்நாத் இயக்கும் ஒரு மாஸான திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்றைய உகாதி பண்டிகையை முன்னிட்டு இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு இணையாக நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘லைகர்’ மற்றும் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அவரது இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் தயங்கிய நிலையில், விஜய் சேதுபதி முன்வந்து தேதிகளை ஒதுக்கியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

விஜய் சேதுபதி ஒருபுறம் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனக்கென தனி இடத்தை உருவாக்கி வருகிறார். மற்றொருபுறம், பூரி ஜெகந்நாத் தெலுங்கு திரையுலகில் மாஸான இயக்குநராக வலம் வருபவர். இவர்களின் கூட்டணியில் எந்த வகையான படம் உருவாகும் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் பூரியின் வெற்றிப் பாதையை மீண்டும் அமைக்குமா? விஜய் சேதுபதியின் நடிப்பு, பூரியின் மாஸ் ஸ்டைல் இயக்கத்துடன் இணைந்து, ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவம் தருமா? திரையுலகமே இதை ஆவலுடன் எதிர்பார்க்கிறது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button