
இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை நாசமாக்கியது! அது தொடர்பான வீடியோவையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி மே 10 2025 :

மே 8 மற்றும் 9, 2025 ஆகிய இரவு, ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பாகிஸ்தானால் திட்டமிட்ட ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் இன்று திட்டமிட்ட தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த தாக்குதல் நடவடிக்கையில், எல்லையிலுள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் நாசமாக்கப்பட்டன. கடந்த காலங்களில் இம்முகாம்கள் இந்தியா மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் திட்டமிடலுக்கும், பயிற்சிக்கும் முக்கிய தளமாக இருந்தன.
இந்திய ராணுவத்தின் சரியான மற்றும் விரைவான பதிலடி, பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்பையும் செயல்திறனையும் கடுமையாக பாதித்துள்ளது.
பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்த காட்சிகளையும் ராணுவம் வெளியிட்டுள்ளது.




